Friday, May 3, 2024
Home » காரை நகர் வீதியை புனரமைத்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

காரை நகர் வீதியை புனரமைத்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

by damith
January 9, 2024 5:55 am 0 comment

காரை நகர் வீதியை புனரமைத்து தருமாறு இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் செந்தூரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே குறித்த கோரிக்கையினை ஜனாதிபதியிடம் முன்வைத்தார்.

16 கிலோமீற்றர் நீளமுள்ள காரைநகர் சுற்று வீதி நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளது. அவ்வீதியை பயன்படுத்துவோர் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இலங்கையில் மிகவும் மோசமான வீதியாக காரைநகர்வீதி காணப்படுகின்றது. எனவே காரைநகர் சுற்று வீதியினை உரிய வடிகால் அமைப்பு முறைகளுடன் புனரமைப்பு செய்து தரவேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

(யாழ்.விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT