சமூகத்தை திரிபுபடுத்தும் வகையில் செயற்பட்டுவரும் நபர்களால், முன்னெடுக்கப்படும் சமய பிரசாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளதாக புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சமய போதனைகளை திரிபுபடுத்தி, சமூகத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுக்கவும், இதுபோன்ற செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கும் அரசாங்கம் புதிய சட்டமொன்றை தயாரித்துவருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைய அனைவருக்கும் தமது சமய நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய வகையில், சூழலை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்