அமெரிக்காவில் போயிங் மெக்ஸ் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் இந்த அவசர உத்தரவைப் பிறப்பித்தது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பறந்துகொண்டிருக்கும்போது விமானத்தின் பாகம் தூக்கி எறியப்பட்டது. அந்த விமானம் கலிபோர்னியா நோக்கிப் புறப்பட்ட சிறிது நேரத்தில் அழுத்தத்தை உணர்ந்ததாக விமானப் பணியாளர்கள் கூறினர். அதில் இருந்த 171 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 170க்கும் அதிகமான போயிங் மெக்ஸ் விமானங்கள் அனைத்தும் பறப்பதற்குத் தகுதியானவையா என்று உடனே சோதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அமெரிக்காவின் போயிங் நிறுவனம் நிர்வாகத்தின் உத்தரவை ஆதரிப்பதாகக் கூறியது. புதிய உத்தரவால் அலஸ்கா ஏர்லைன்ஸ் நூற்றுக்கும் அதிகமான பயணங்களை ரத்துச் செய்தது.
போயிங் விமானங்கள் அவசர தரையிறக்கம்
172
previous post