தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டு நாட்களுக்குள் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இந்திய அணி இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை 1–1 சமன் செய்தது.
கேப் டவுனில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (04) இந்திய அணிக்கு 79 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்த இலக்கை மூன்று விக்கெட்டுகளை இழந்து எட்டியது.
இந்த டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 55 ஓட்டங்களுக்கே சுருண்டதோடு இந்த அணி முதல் இன்னிங்ஸில் 153 ஓட்டங்களையே பெற்றது. அதிலும் இந்திய அணியின் கடைசி ஆறு விக்கெட்டுகளும் ஓட்டங்கள் இன்றியே விழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணிக்கு ஆரம்ப வீரர் எய்டன் மார்க்ரம் 106 ஓட்டங்களை பெற்றபோதும் வேறு எவரும் 13 ஓட்டங்களை கூட பெறாத நிலையில் அந்த அணி 176 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறியொடுத்தது.