Monday, May 20, 2024
Home » புதையல் தோண்டிய ஏழு பேர் உபகரணங்களுடன் கைது

புதையல் தோண்டிய ஏழு பேர் உபகரணங்களுடன் கைது

by Gayan Abeykoon
January 5, 2024 9:16 am 0 comment

இரத்தினபுரி எல்லைப்பிரதேசமான மில்லனிய ஹல்தொட்ட பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் ஏழு பேரை மில்லனிய பொலிஸார் நேற்று (4) கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இவ்விடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேகநபர்களை உபகரணங்களுடன் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 22 முதல் 46 வயதுக்குட்பட்ட மில்லனிய ஹல்தொட்ட ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என மில்லனிய பொலிஸார் தெரிவித்தனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT