வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் அநுராதபுரம் மாவட்டத்தில் சிறந்த இன வாழை பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை அநுராதபுரம் ராஜாங்கனை பகுதியில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மேற்படி மாவட்டத்தின் தம்புத்தேகம, நொச்சியாகம, திறப்பனை பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டுக்கு பாரிய அளவிலான அன்னிய வருமானத்தினை ஈட்டிக்கொள்ள முடியுமென்பதுடன் செய்கையாளர்களும் பெரிதும் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டம் விவசாயத் திணைக்களத்தின் பூரண கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுவதாக அநுராதபுரம் மாவட்ட விவசாயத் திணைக்கள பணிப்பாளர் தேனுவர மேலும் தெரிவித்தார்.
அநுராதபுரம் தினகரன் நிருபர்