129
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினுடைய வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலாளர் காப்புறுதி திட்டத்தில் சுமார் 3,000 கடற்றொழிலாளர்கள் இணைந்துள்ளதாக, அம்மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தெரிவித்தார்
இந்தக் காப்புறுதி திட்டத்தின் கீழ் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த கடற்றொழிலாளர் ஒருவருக்கும் இயற்கை மரணமடைந்த மற்றுமொரு கடற்றொழிலாளருக்கும் சுமார் 13 இலட்சம் ரூபா உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு குறூப் நிருபர்