காசாவில் அவசர போர் நீறுத்தம் ஒன்றை கோரும் தீர்மானம் தொடர்பில் 193 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐ.நா பொதுச் சபையில் இன்று (12) வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அவசர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானத்தை நிராகரித்து அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை (8) வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய நிலையிலேயே பொதுச் சபையில் அவசரக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
எனினும் பொதுச் சபையில் கடந்த ஒக்டோபரில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், “மோதலை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும் அவசரமான, நீடித்த மற்றும் நிலையான மனிதாபிமான போர் நிறுத்தம்” ஒன்றுக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்திற்கு 121 நாடுகள் ஆதரவாகவும் 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததோடு 44 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்திருந்தன.