தலைமன்னாரிலிருந்து படகு மூலம் அகதிகளாக வந்த ஏழு பேரை, கடலோரப் பாதுகாப்புக் குழு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், யாழ்ப்பாணம் தொல்புரத்தைச் சேர்ந்த நாகராஜ் (43), இவரது மனைவி வந்தினி (38), அனோஜன் (13), கஜிவன்(9), தனுஷ்கா (4), அஜந்தன் (18), கிசாலினி (17) ஆகியோா் படகுக் கட்டணமாக ரூ. 1.50 இலட்சம் செலுத்தி, தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு அதிகாலை வந்ததாகத் தெரிய வந்தது.
விசாரணையில், குழந்தை கேசவி இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், அவருக்கு தமிழகத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அகதியாக வந்ததாகவும் தந்தை அமுதன் தெரிவித்தார்.
இதன்பிறகு, 07 அகதிகளையும் மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில், கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் ஒப்படைத்தனர்.
திருச்சி எம். கே. ஷாகுல்