ஜெரூசலத்திற்கான நுழைவாயிலில் நேற்று (30) இரு பலஸ்தீன தாக்குதல்கதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டு எட்டுப் பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தில் வந்த துப்பாக்கிதாரிகள் பஸ் நிலையத்தில் உள்ள பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சூடு நடத்தியதாக இஸ்ரேலிய பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு ஜெரூசலத்தைச் சேர்ந்த இரு தாக்குதல்தாரிகளும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த இடத்திற்கு பெரும் எண்ணிக்கையான பொலிஸார் குவிக்கப்பட்டதோடு அம்புலன்ஸ் வண்டிகளும் விரைந்தனர். பாதுகாப்பை உறுதிப் படுத்த சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேலிய பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை நீடிப்பது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவர்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.