புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் தீர்மானம் மிக்க உயர்மட்ட கலந்துரையாடலொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் அண்மையில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போதும் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் அக் கலந்துரையாடலில் மேற்கொள்ளப்படவில்லை.
பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரட்ன கடந்த வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றார். அவர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி பதவியிலிருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு நான்கு தடவைகள் சேவை நீடிப்பை வழங்கியிருந்தார்.
அதேவேளை, புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் நியமனப் பத்திரத்தை அடுத்த வாரம் அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அரசியலமைப்பு பேரவை அமர்வுக்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும் அது தொடர்பான திகதி இன்றைய தினம் அறிவிக்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.
லோரன்ஸ் செல்வநாயகம்