223
ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் லொறியொன்று சுரங்கப்பாதையில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. தலவாக்கலையிலிருந்து அகரபத்தன நோக்கி சென்றுக் கொண்டிருந்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (20) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் லொறி சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இப்பகுதியில் மண்மேடுகள் சரிந்துவிழும் அபாயம் காணப்படுவதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் ஹற்றன் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.