146
திருகோணமலை மாவட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான பன்குளம் கிராமத்திலுள்ள நொச்சிக்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில், சுமார் 19 வருடங்களின் பின்னர் மாணவி ஒருவர் தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
மாணவி கார்னிகா ஆனந்தம் 144 புள்ளிகளை பெற்று இப்பரீட்சையில் சாதனை படைத்துள்ளார்.
திருகோணமலை வடக்கு கல்வி வலயம் (கோமரங்கடவெல) உருவாக்கப்பட்ட பின்னர் புலமைப்பரிசில் பரீட்சையில், சித்தியடைந்த முதல் மாணவி இவரென்பது குறிப்பிடத்தக்கது. 1990 இல், இக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த இக்கிராம மக்கள் அனைவரும், மீண்டும் 2004 இல் மீள் குடியேற்றப்பட்டதையடுத்து இப்பாடசாலையும் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
(திருகோணமலை தினகரன் நிருபர்)