மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமைபுரியும் போதைப்பொருள் முற்தடுப்பு செயற்பாடுகளில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரத்தின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலகம், மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்துடன் இணைந்து இதுதொடர்பான ஆறுமாத கால பயிற்சி நெறியை மேற்கொண்டனர். இப்பயிற்சி நெறியை நிறைவு செய்த உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் மாவட்ட செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
இதன்போது 88 உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன. இப்பயிற்சி செயலமர்வில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள், உளவளத் துணை உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்குபற்றியிருந்தனர்.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)