வரலாற்று பிரசித்திபெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த புனித ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹுல் முஸ்லிம் ஆகிய ஹதீஸ் கிரந்தங்களின் பாராயண மஜ்லிஸின் ஆரம்ப வைபவம் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட் கிழமை அதிகாலை 4 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹ் மௌலவி ஸக்கி அஹமத் (அஷ்ரபி) பின் அஷ் ஷெய்ஹ் முஹம்மத் காலிப் அலவி ஆலிம் அலவியதுல் காதிரி தலைமையில் ஆரம்பமாகும் இப்புனித மஜ்லிஸில் மார்க்க அறிஞர்கள், உலமாக்கள், முரீதீன்கள் பங்குபற்றுவர்.
வெள்ளிக்கிழமை தவிர ஏனைய நாட்களில் ஹதீஸ் பாராயணம் மற்றும் மார்க்கச்சொற்பொழிவு இடம்பெறுவதோடு டிசம்பர் 17 ஆம் திகதி (17.12.2023) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் தமாம் நிகழ்வு இடம்பெறும்.
தமாம் வைபவத்தில் தரீக்காக்களின் இஹ்வான்கள், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் கலந்துகொள்வர்.