பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி (Paying ward) அமைப்பதற்கான இடங்களையும், அங்கு இடம்பெற்றுவரும் அபிவிருத்திப் பணிகளையும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் (06) பார்வையிட்டனர். இதன்போது பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.ஐ.எம். றஹிம் மற்றும் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர். தற்போது பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சீன அரசின் நிதியுதவில் சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக்கட்டடம் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, நிர்வாகப் பிரிவுகளைக் கொண்ட கட்டடத் தொகுதி போன்ற அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
பாலமுனை விசேட, மாளிகைக்காடு குறூப் நிருபர்கள்கல்முனை பிராந்திய பணிப்பாளர் பொத்துவில் வைத்தியசாலைக்கு விஜயம்
283