அபூதாபி ரி10 லீக் தொடரில் இடம்பெற்ற பங்களாதேஷைச் சேர்ந்த கிரிக்கெட் அணியான பங்ளா டைகர்ஸ் லங்கா ரி10 கிரிக்கெட் தொடரிலும் இடம்பெறுவதாக அறிவித்துள்ளது.
புதிய யுகம் ஒன்றில் காலெடுத்து வைக்கும் வகையில் இலங்கை தீவிலும் தமது அணி ஆடவிருப்பதாக பங்ளா டைகர்ஸ், முன்னர் ட்விட்டர் என அறியப்பட்ட எக்ஸ் சமூகதளத்தில் அறிவித்துள்ளது.
லங்கா ரி10 தொடரில் அந்த அணி பங்ளா டைகர்ஸ் ஹம்பாந்தோட்டை என்ற பெயரில் களமிறங்கவுள்ளது.
பிராந்திய கிரிக்கெட் மையங்களை உள்ளடக்கியதாக லங்கா ரி10 தொடரில் ஆறு ஆடவர் அணிகள் மற்றும் நான்கு மகளிர் அணிகள் இடம்பெறவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் ஆறு வெளிநாட்டு வீரர்களுடன் 16 வீரர்கள் இடம்பெறுகின்றனர். முதலாவது லங்கா ரி10 தொடர் எதிர்வரும் டிசம்பர் 12 தொடக்கம் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.