மூதூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் நூற்றாண்டு விழா நாளை சனிக்கிழமை (28) கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.தர்ஜுன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளன.
1922 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இப்பாடசாலை கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டு நூற்றாண்டு பூர்த்தியானதையிட்டு கல்லூரி நிருவாகம், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் சமூகம் என கலந்து சிறப்பிக்கும் இவ்விழாவில் பல்வேறு நிகழ்வுகள் காலை, மாலை இரு அமர்வுகளாக இடம்பெற உள்ளன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கலந்து சிறப்பிக்க உள்ளார்.
கௌரவ அதிதிகளாக திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கபில நுவன் அத்துகோரள, எம்.எஸ்.தௌபீக், இம்றான் மஹ்றூப் ஆகியோர் கலந்து கொள்வதுடன் விசேட அதிதியாக மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் இஸட்.எம்.எம்.நளீம் முனவ்வரா கலந்து சிறப்பிக்க உள்ளார்.
(மூதூர் தினகரன் நிருபர்)