யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்தின் கீழ் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு சென்.ஜேம்ஸ் மகளிர் பாடசாலை மண்டபத்தில் இயக்குனர் அருட்பணி ச.இயூஜின் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது.
சிறுவர் தினத்திற்கான “இயற்கையோடு இணைந்த நம் வாழ்வு” எனும் தலைப்பிலான ஓவியப் போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சமாதான நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறுவர் களுக்கான மகிழ்வூட்டும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யுனிசெப் நிறுவன இணைப்பாளர் திருமதி சர்மினியும், சிறப்பு விருந்தினராக வலயக்கல்வி பணிப்பாளர் P.ரவீந்திரனும் புனித யாகப்பர் ஆலய உதவிப் பங்குத்தந்தை, புனித யாகப்பர் ஆலய மகளிர் பாடசாலை அதிபர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.