“எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும் தொனிப்பொருளில், தர்காநகர் ஏஸியம் கல்வியகத்தில் மத்துகம அன்னாசிகல தமிழ் வித்தியாலய அதிபர் ஏ.ஸீ.எம். றிப்கான் தலைமையில் இடம்பெற்ற சிறுவர் தின விழாவில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விசேட வினா, விடைப்போட்டியொன்றும் இடம்பெற்றது. மாணவர் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து போட்டிப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்கள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் விசேட அதிதிகளாக தர்காநகர் தேசிய கல்லூரியின் ஆசிரியை ஜனாபா பாயிக்கா பஸ்லிம், மத்துகம பிரதேச செயலக பெருந்தோட்ட சமூக இணைப்பாளர் எம்.பீ.எப்.நுளாரா, சமூக சேவகர்களான எம்.எஸ்.எம்.இஹ்ஸான், மொஹமட் ஹஸன்,எம்.எம்.எம்.பிர்தௌஸ்,எம்.எஸ்.எம்.றிப்கான்,ஸபர் மொஹமட், பாத்திமா நஸீமா ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.