212
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 150ஆவது திருவள்ளுவர் சிலையை சென்னை சாய்ராம் கல்லூரி வளாகத்தில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சா் டாக்டர் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் அண்மையில் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் வி.ஜி.சந்தோசம், சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜிபி ராஜாதாஸ் மற்றும் பலர் உடன் உள்ளதை படத்தில் காணலாம்.