அகில இலங்கை தமிழ் மொழித்தின தென் மாகாண போட்டிகளில் ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய கல்லூரி ஆறு முதல் இடங்களைப்பெற்று தென் மாகாணத்தில் அதிக முதல் இடம் பெற்ற பாடசாலையாக திகழ்வதாக தென் மாகாண கல்வித் திணைக்கள தமிழ் மொழிப் பாடசாலைகளுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம். ஏ. எம். மஷாயிர் நேற்று (01) தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் ஆறு முதல் இடங்கள், இரண்டு இரண்டாம் இடங்கள் மற்றும் ஐந்து மூன்றாம் இடங்களை பெற்று மொத்தம் 13 நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டியுள்ளனர். வெலிகம அறபா தேசிய பாடசாலை ஐந்து முதல் இடங்களைப் பெற்று இரண்டாம் இடத்தினையும் காலி சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் மூன்று முதல் இடங்கள்,நான்கு இரண்டாம் இடங்கள் மற்றும் நான்கு மூன்றாம் இடங்களைபெற்று மொத்தம் 11 நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டி மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.
தென் மாகாணபோட்டிகளில் முதலாவது இடங்களினை பெற்ற மாணவர்கள் அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம். ஏ. எம். மஷாயிர் மேலும் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்