159
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் 179 புள்ளிகளை பெற்று முதலிடத்தை வென்றுள்ளது.
கந்தளாய் லீலாரத்தின மைதானத்தில் ஐந்து நாட்கள் நடைபெற்று கடந்த சனிக்கிழமை (23) நிறைவடைந்த இந்தப் போட்டியில் முதலிடம் பெற்ற பட்டிருப்பு கல்வி வலயத்தில் செட்டிபாளையம் மகாவித்தியாலயம் 9 தங்கங்களையும் களுதாவளை மகாவித்தியாலயம் 8 தங்கங்களையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.
திருக்கோவில் கல்வி வலயம் மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயங்கள் தலா 92 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை வென்றன.
துறைநீலாவணை நிருபர்