Home » பைடனை சந்தித்தார் உக்ரைன் ஜனாதிபதி

பைடனை சந்தித்தார் உக்ரைன் ஜனாதிபதி

by gayan
September 23, 2023 10:13 am 0 comment

அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தனியாகவும், பின்னர் அதிகாரிகளுடனும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஜோ பைடனுடனான சந்திப்பு மிகவும் முக்கியமானது என்று ஸெலன்ஸ்கி கூறினார்.

இந்தச் சந்திப்பின்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், இராணுவ தளபாடங்கள் அளிப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்த பின்னர் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஸெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அவர் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் உள்ளிட்டோரை சந்தித்து உக்ரைன் போரில் ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT