338
இலங்கைக்கு எதிரான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் பந்துவீச்சாளர்களுக்கான ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் அதிரடியாக முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
சிராஜ் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாதத்திற்கு இடையே முதலிடம் வகித்த நிலையில் அவுஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட் அந்த இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை இலகுவாக்கிய சிராஜ் எட்டு இடங்கள் முன்னேற்றம் கண்டே முதலிடத்தை பிடித்துள்ளார்.