பேருவளை பகுதியில் சமூக சேவைகளை முன்னெடுத்து வரும் ‘Maradana Charity’ அமைப்பு இந்த வருடம் முதல் தமது கல்விசார் செயற்பாடுகளுக்கு ‘இக்ரா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் அங்குரார்ப்பண நிகழ்வும் முதலாவது செயற்திட்டமும் கடந்த 16ஆம் திகதி பேருவளை ஸேம் றிபாய் ஹாஜியார் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
அமைப்பின் முதலாவது வேலைத்திட்டமாக மேற்படி பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கருத்தரங்கொன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர் அர்ஷாத் புஹாரி கலந்துகொண்டார். மேலும் பாடசாலையின் அதிபர் குமார், ‘Maradana Charity’ அமைப்பின் பொதுச் செயலாளர் ரூமி ஹாரிஸ், உப தலைவர் அஸ்கர் ஹாரிஸ், பொருளாளர் அப்ஹாம் வஹாப், இணைப்பாளர் நஜாத் நிஸாம் உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இக்கருத்தரங்கில் நடத்தப்பட்ட பரீட்சையில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
பேருவளை விசேட நிருபர்