Sunday, May 19, 2024
Home » நடமாடும் சேவைகளூடாக விரைவுபடுத்த வேண்டும்
மலையக மக்களுக்கு தேசிய அடையாள அட்டை:

நடமாடும் சேவைகளூடாக விரைவுபடுத்த வேண்டும்

by sachintha
September 20, 2023 9:55 am 0 comment

மலையக மக்களுக்கு மிக அவசியமான தேசிய அடையாள அட்டையை விரைவாக பெற்றுக் கொடுக்கும் வகையில், அப்பகுதிகளில் நடமாடும் சேவைகளை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அடையாள அட்டையின்றி பெருந்தோட்டங்களில் பெருமளவு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், அந்த மக்களுக்கு அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்க விசேட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஆட்களை பதிவுசெய்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பெருந்தோட்டப் பகுதிகளில் ஈ.பி.எப். ஈ.டி.எப், பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளின் போது, அம்மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. அத்துடன் அரசாங்கம் இந்த வருடத்துக்குள் பல சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.இதற்காக பல சட்டங்களில் திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT