சிங்கப்பூர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை பூர்வீகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் இன்று (14) உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார். சிங்கப்பூரின் எட்டாவது ஜனாதிபதியும், முதல் பெண் ஜனாதிபதியுமான ஹலீமா யாகூப்பின்
பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து, அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தோ்தல் இம்மாதம் (01) நடைபெற்றது. இத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம், பதிவான 24.8 இலட்சம் வாக்குகளில் 17.46 இலட்சம் (70.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, சிங்கப்பூரின் 09ஆவது ஜனாதிபதியாக தா்மன் சண்முகரத்தினம் இன்று பொறுப்பேற்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.