வியட்நாம் தலைநகர் ஹனோயில் ஒன்பது மாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து நிகழ்ந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அந்தச் சம்பவத்தில் பலரும் தீ காயத்திற்கு உள்ளாகி இருப்பதாக அதிகாரபூர்வ வி.என்.ஏ செய்தி நிறுவனம் நேற்று (13) தெரிவித்தது.
எத்தனைப் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
அந்தக் கட்டடத்தில் 150 பேர் வசித்து வந்ததாகவும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் திடீரென்று தீ மூண்டுவிட்டதாகவும் இருந்தாலும் அதிகாலை 2 மணி அளவில் தீ அணைக்கப்பட்டதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இரவு நேரத்தில் தீ அணைக்கப்பட்டதை அடுத்த நாள் அதிகாலை நேரத்தில் தொலைக்காட்சிகள் காட்டின.
பொலிஸார் புலன்விசாரணையை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் குறுகிய தெருவில் கட்டடம் உள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உயிர்ப்பலி அதிகரிக்க வாய்ப்புள்ளது.