Monday, May 13, 2024
Home » தன்னியக்க ரீதியில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படும்

தன்னியக்க ரீதியில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படும்

by gayan
September 14, 2023 7:04 am 0 comment

எரிபொருள் விலைகள் தன்னியக்கமாக திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கை அடுத்த வருடம் முதல் நடை முறைப்படுத்தப்படுமென

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுடன் நேற்று அமைச்சர் விசேட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

இப்பேச்சுவார்த்தையின் போது எரிபொருள் விநியோகஸ்தர்களின் விற்பனை பணம் தொடர்பாக நடைமுறையிலுள்ள வழக்கை இணக்கப் பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணித்தல், உராய்வு நீக்கி எண்ணெய் சம்பந்தமான நடவடிக்கைகள்

மற்றும் விற்பனை நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் போது கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT