250
கல்வி எழுச்சியினூடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். அதேபோல், கல்வியியலாளர்களும் அரசியலுக்குள் பிரவேசிப்பதனூடாகவே அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான இல்ஹாம் மரிக்கார் தெரிவித்தார்.
புத்தளம் iSoft கல்லூரியின் விருது வழங்கல் விழா அண்மையில் கந்தையா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் விஷேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
இளைஞர்கள் உயர் கல்வி கற்பது காலத்தின் தேவையாகும்.
சமூகத்தில் கல்வி எழுச்சியினூடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.