Friday, May 17, 2024
Home » கல்வியியலாளர்களும் அரசியலுக்குள் பிரவேசிப்பது காலத்தின் தேவையாகும்

கல்வியியலாளர்களும் அரசியலுக்குள் பிரவேசிப்பது காலத்தின் தேவையாகும்

-பேராதனை பல்கலை விரிவுரையாளர் இல்ஹாம் மரிக்கார்

by sachintha
September 13, 2023 12:36 pm 0 comment

கல்வி எழுச்சியினூடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். அதேபோல், கல்வியியலாளர்களும் அரசியலுக்குள் பிரவேசிப்பதனூடாகவே அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான இல்ஹாம் மரிக்கார் தெரிவித்தார்.

புத்தளம் iSoft கல்லூரியின் விருது வழங்கல் விழா அண்மையில் கந்தையா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் விஷேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

இளைஞர்கள் உயர் கல்வி கற்பது காலத்தின் தேவையாகும்.

சமூகத்தில் கல்வி எழுச்சியினூடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT