405
பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் உதைப்பந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணி மாகாண சம்பியனாக தெரிவானது.
கிண்ணியா தேசிய பாடசாலை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அலிகார் தேசிய பாடசாலை அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
இப்போட்டியில் வெற்றியீட்டிய பாடசாலை மாணவர்களையும் இதற்காக மாணவர்களை பயிற்றுவித்து தயார்படுத்திய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்களையும் பாடசாலையின் அதிபர் எம்.எம். மெளஜுத் பாராட்டியதோடு பாடசாலை நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
ஏறாவூர் சுழற்சி நிருபர்