ஈஸ்டர் 21 தாக்குதல்கள் தொடர்பான செனல்- 04 காணொளியில், தன்னை இணைத்து கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கத்தில் முறையிடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பின்னர், இது குறித்த முறைப்பாடுகளை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். செனல் 4 ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முறைப்பாடொன்றை பதிவு செய்யச் சென்றிருந்தார். எனினும், பொலிஸ் மா அதிபருடன் கலந்தாலோசித்து, அவரது ஒப்புதலுடன் இம்முறைப்பாட்டை பதிவுசெய்யுமாறு அவரது அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
இதுபற்றி விபரித்த இராஜாங்க அமைச்சர்: தன்னுடன் இணைந்து பணியாற்றிய ஹன்சீர் ஆசாத் மௌலானா, வௌிநாடுகளில் புகலிடம் பெறுவதற்காக சனல்-04 வில், போலிக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளா ர்.சில பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனக் கூறி, குடும்பத்துடன் வெளிநாடு செல்ல அதிகார்பூர்வமாக மௌலானா அனுமதி பெற்றிருந்தார்.
ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாடு சென்றிருந்த நிலையிலே சர்ச்சைக்குரிய கருத்தை ஹன்சீர் ஆசாத் மௌலான வெளியிட்டுள்ளார். 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்குதியில், நான்,சிறையில் இருந்தேன். சிறையிலிருக்கையில், ஆசாத் மௌலானா கூறுவதைப் போன்று, தாக்குதல் திட்டமொன்றை தீட்டுவது சாத்தியமற்றது. இது தொடர்பில் சர்வதேச அமைப்புகளூடாக விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.