ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 2 ஓட்டங்களால் த்ரில் வெற்றியீட்டி ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் போஃர் சுற்றுக்கு முன்னேறிய இலங்கை அணியின் போட்டி அட்டவணை உறுதி செய்யப்பட்டுள்ளது.
லாகூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பி குழுவுக்கான கடைசி குழுநிலை போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து பதிலெடுத்தாடிய ஆப்கான் அணி சுப்பர் போஃர் சுற்றுக்கு முன்னேற 37.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்ட வேண்டும் என்ற நிலையில் அதிரடியாக ஆடியது. எனினும் அந்த அணி 37.4 ஓவர்களில் 289 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இந்நிலையில் சுப்பர் போஃர் சுற்றுக்கு முன்னேறிய இலங்கை அணி தனது முதல் போட்டியில் வரும் சனிக்கிழமை (09) பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
தொடர்ந்து செப்டெம்பர் 12 ஆம் திகதி இந்திய அணியையும் செப்டெம்பர் 14 ஆம் திகதி பாகிஸ்தான் அணியையும் சந்திக்கவுள்ளது.
அனைத்துப் போட்டிகளும் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகும்.