சாஹிரா கல்லூரியின் பழைய மாணவத் தலைவர்கள் சங்கத்தினால் 17 ஆவது முறையாக நடத்தப்படும் நோலிமிட் சுப்பர் 16 சம்பியன்சிப் கால்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி குதிரைப்பந்தய சர்வதேச அரங்கில் நடைபெறவுள்ளது.
16 முன்னணி பாடசாலை அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி அணிக்கு 7 பேர் கொண்டதாக ஒரு நாள் முழுவதும் நடத்த ஏற்பாடாகியுள்ளது. இந்த போட்டி தொடர்பில் விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த திங்கட்கிழமை (28) கொழும்பு, சாஹிரா கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது பிரதான அனுசரணையாளரான நோலிமிட் மற்றும் ஏனைய அனுசரணையாளர்களின் அனுசரணை காசோலை வழங்கும் நிகழ்வு மற்றும் ஜெர்சி அறிமுகம், கிண்ண அறிமுகம், அணிகளை குழுநிலைப் படுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் கடந்த ஆண்டு சம்பியனான கொழும்பு, சாஹிரா கல்லூரி முதல் கொண்டு 16 பாடசாலை அணிகள் போட்டியிடவுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கம்பளை சாஹிரா கல்லூரி அணிகளும் இந்தப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தவிர, கனிஷ்ட பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.
ருஸைக் பாரூக்