‘தோள் கொடு தோழா 97 நண்பர்கள் வட்டம்’ அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை (26) பொத்துவில் பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் சிறுவர்களுக்கான இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது.
பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட, லண்டனில் சிறுபிள்ளை விசேட வைத்திய நிபுணர்களாகக் கடமையாற்றும் வைத்தியர்களான பௌமி ஹசன், ஷர்மி ஹசன் ஆகியோர் பங்குபற்றி 100 இற்கும் மேற்பட்ட 14 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கினர்.
நீண்ட நாட்களாக பாரிய நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற மற்றும் ஆரம்ப கட்டப் பாதிப்புகளுக்கு உள்ளான சிறுவர்களுக்கும் இங்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இம்முகாமில் மூவின மக்களும் பயன் பெற்றுக் கொண்டனர்.
இம்முகாமில் பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் 97 நண்பர் வட்ட அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
றிசாத் ஏ. காதர்-…
(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)