– குசல் ஜனித் குணமடைந்த பின் இணைவார்
ஆசிய கிண்ணத்தில் பங்குபற்றும் இலங்கை குழாம் விபரம் இன்று (29) அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் 15 பேர் கொண்டு குறித்த குழாமிற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் நாளை (30) ஆரம்பமாக உள்ளது.
இம்முறை நடைபெறும் ஆசிய கிண்ண தொடர் ஒருநாள் போட்டிகளாக இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற ஏற்பாடகியுள்ளது.
இதில் 4 போட்டிகளில் பாகிஸ்தானிலும் 9 போட்டிகள் இலங்கையிலும் விளையாடப்பட உள்ளது.
நாளை இடம்பெறும் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாள அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
அதற்கமைய, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணி விபரம் வருமாறு
1. தசுன் ஷானக (தலைவர்)
2. பெத்தும் நிஸ்ஸங்க
3. திமுத் கருணாரத்ன
4. குசல் ஜனித் பெரேரா
5. குசல் மெண்டிஸ்
6. சரித் அசலங்க
7. சதீர சமரவிக்ரம
8. தனஞ்சய டி சில்வா
9. துஷான் ஹேமந்த
10. துனித் வெல்லால்லகே
11. மஹீஷ் தீக்ஷண
12. பிரமோத் மதுஷான்
13. கசுன் ராஜித
14. பினுர பெனாண்டோ
15. மதீஷ பத்திரண
அதற்கமைய, வணிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, லஹிரு குமார, டில்ஷான் மதுசங்க ஆகியோர் உபாதை காரணமாக குழாத்தில் இடம்பெறவில்லை.
அத்தோடு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள, குசல் ஜனித் பெரேரா பூரண சுகமடைந்த பின்னர் இலங்கை அணியோடு இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை ஆசிய கிண்ண தொடரில் இலங்கை அணி அதன் முதலாவது போட்டியில் நாளை மறுதினம் (31) வியாழனன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டு கண்டி பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளது.
இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
இஷ்ரத் இம்தியாஸ்