Home » இலங்கையில் தெளஹீத் பிரசாரப்பணி தோற்றமும் வீழ்ச்சியும் நூல் வெளியீடு ஞாயிறன்று

இலங்கையில் தெளஹீத் பிரசாரப்பணி தோற்றமும் வீழ்ச்சியும் நூல் வெளியீடு ஞாயிறன்று

by Rizwan Segu Mohideen
August 24, 2023 3:29 pm 0 comment

திக்குவெல்லை மெளலானா மெளலவி செய்யது இஸ்மாயில் இமாம் எழுதிய  ‘இலங்கையில் தெளஹீத் பிரசாரப்பணி தோற்றமும் வீழ்ச்சியும்’ நூல் வெளியீடு எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  காலை 9,30 மணிக்கு திக்குவெல்லை மின்ஹாத் தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ளது.

தென் மாகாண தமிழ் மொழி பாடசாலை பிரதி கல்விப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். மஷாயிம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில்   ஹமீத் அல் ஹுஸைனியா அதிபர் எம்.ரீ.எம். ரிஸ்கி வரவேற்புரை நிகழ்த்த இருப்பதோடு மௌலவி எம்.எஸ்.எம்.பாயிஸ்(இஸ்ஹானி) ஓய்வு  பெற்ற முன்னாள் தென்மாகாண பிரதிக்  கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எம். மொஹமட் மற்றும் ஓய்வுபெற்ற முன்னாள் தேர்தல் அதிகாரி எம்.ஆர்.எம். நிஸ்தார் ஆகியோர் கருத்துரையாற்றுவர். யோனகபுர  ஹம்ஸாவின் கவிவாழ்த்தும் இடம்பெற உள்ளது. நூல் ஆய்வுரையை மெளலானா மெளலவி ஜெ. அப்துல் மஜீத் பாகவீ (பிரதம கதீப், நாகோர் மஸ்ஜித். மலேசியா) நிகழ்த்த இருப்பதுடன் சிறப்புரையை திக்குவெல்லை கமால் நிகழ்த்தவுள்ளார். (பா)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT