கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவியான மரியம் அனஸ் அகில இலங்கை கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்று அந்தக் கல்லூரியைச் சேர்ந்த முதல் குத்துச் சண்டை வீராங்கனையாக பதிவாகியுள்ளார்.
கொழும்பு, கொம்பனித் தெரு குத்துச் சண்டை கழகத்தைச் சேர்ந்த மரியம், நேவியா சவால் கிண்ண குத்துச் சண்டை சம்பியன்சிப் போட்டியில் 44–40 எடைப் பிரிவில் ஈ.ஏ.பீ. எதிரிசிங்கவை வென்றார். இந்தப் போட்டி இரத்தினபுரி சீவலி அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
எனினும் மரியம் தனது இரண்டவாது போட்டியில் ஆர்.பீ அனுத்தராவிடம் தோல்வி அடைந்தார். கொம்பனித் தெரு குத்துச் சண்டை கழக பயிற்சி நிலையத்தில் அவரது பயிற்சியாளராக என்.என் தனஞ்சய செயற்படுகிறார்.
அஷ்ரப் ஏ சமத்