ஐ.என்.எஸ். சென்னை’ இந்தியாவின் ‘மேற்கு பிராந்தியக் கடற்படையின் முன்னணி யுத்தக் கப்பல், சவூதி அரேபியாவின் ஜித்தா துறைமுகத்திற்கு நல்லெண்ண செயற்பாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.
ஜித்தா துறைமுகத்தை சென்றடைந்த இக்கப்பலுக்கு சவூதி அரேபியாவின் ரோயல் கடற்படை மற்றும் எல்லைக் காவலர் படை அதிகாரிகளும் இந்திய தூதரக அதிகாரிகளும் மகத்தான வரவேற்பு அளித்துள்ளனர்.
ஜித்தா துறைமுகத்திற்கான விஜயத்தின் போது அளிக்கப்பட்ட வரவேற்பு மற்றும் ஒத்துழைப்புக்கு ஐ.என்.எஸ் கப்பல் கப்டனும் பாதுகாப்பு இணை அதிகாரி கேர்னல் ஜி.எஸ் கிரேவாலும் சவூதி அரேபியாவின் எல்லைக்காவல் படை தளபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஜித்தாவிலுள்ள கொன்சியூலர் ஜெனரல் முஹமது ஷாஹித் ஆலம் இக்கப்பலைப் பார்வையிட்டதோடு அவருக்கு கப்பலின் இயங்கு திறன்கள் குறித்து கப்பல் அதிகாரிகள் எடுத்துக்கூறியதாக கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் விடுத்துள்ள ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.