இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டையொட்டி நினைவு தபால் முத்திரைகளும் நாணய குற்றிகளும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுடில்லியில் நடைபெற்ற பாரத் மண்டபம் திறப்பு விழாவின் போது வெளியிடப்பட்ட இந்த இரண்டு நினைவு தபால் முத்திரை மற்றும் நாணயக் குற்றிகளிலும் “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஜி20 நாடுகள் அமைப்பின் சர்வதேச உச்சிமாநாடு அடுத்த மாதம் புதுடில்லியில் நடைபெறவுள்ளது. 110 நாடுகளில் இருந்து 12,300 பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ள இம்மாநாட்டையொட்டி பாரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு 60 நகரங்களில் 200 கூட்டங்களும் நடாத்தப்பட்டுள்ளன.