ஆக்கிரமிக்கப்பட்்ட மேற்குக் கரை நகரான ஜெரிகோவில் உள்ள அகதி முகாம் ஒன்றில் இஸ்ரேலிய படை நடத்திய சுற்றுவளைப்பு நடவடிக்கையின்போது இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
“நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இரு இளைஞர்கள் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டதாக” ஜெரிகோ மருத்துவமனையின் பணிப்பாளர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
நேற்று (15) அதிகாலை இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் 16 மற்றும் 25 வயது இளைஞர்கள் மீதே நெஞ்சில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெரிகோவில் கடந்த பல மாதங்களில் உயிரிழப்புக் கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையாக இது உள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒரு மணி நேரத்திற்கு குறைவான காலமே நீடித்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலஸ்தீன அகதி முகாம்கள் மீதான இஸ்ரேலின் சுற்றிவளைப்பு தேடுதல்கள், பலஸ்தீன கிராமங்கள் மீதான இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் மீதான பலஸ்தீனர்களின் தாக்குதல்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதிகளில் அண்மைய மாதங்களில் வன்முறை அதிகரித்துள்ளது.