1K
பலளுவெவ ரொலெக்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கட்டுக்கெலியாவ கே.சீ.சீ. விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
பலளுவெவ ரொலெக்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இம்மாதம் 11, 12 ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்தத் தொடரில் 16 அணிகள் பங்கேற்றிருந்தன. இதன் இறுதிப் போட்டியில் விஜிதபுர டப்ளியூ.சீ.சீ. அணியை கே.சீ.சீ. அணி வீழ்த்தியது.
இறுதிப் போட்டியில் ஒரு ஓவரில் ஓட்டம் எதுவும் கொடுக்காது மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய கே.சீ.சீ. அணியின் ரவ்ஸான் சிறப்பாட்டக்காரராக தெரிவுசெய்ப்பட்டார்.
கல்நேவ தினகரன் விசேட நிருபர்