சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு USF Sri Lanka அமைப்பினால் இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான அ.கபூர் அன்வர் நெறிப்படுத்தலில் அமைப்பின் தவிசாளர் ஏ.எம். சஹான் தலைமையில் ‘சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில் ஒருநாள் செயலமர்வு சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் வரிசைப்படுத்தல் படையின் திகாமடுல்ல மாவட்ட பணிப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயலாளருமான றிஸ்கான் முகம்மட் கலந்து கொண்டார்.
ஏனைய அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் மாவட்ட உதவிப் பணிப்பாளர் SMA லத்தீப் மற்றும் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஹமீர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வின் வளவாளராக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பாலியல் நோய்ப்பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.என்.எம். தில்சான் கலந்து கொண்டு ‘தற்கால இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதனை வெற்றி கொள்வது எவ்வாறு?’ என்பது பற்றி இளைஞர் யுவதிகளுக்கு மிகவும் பயனுள்ள கருத்துக்களை முன்வைத்தார்.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட றிஸ்கான் முகம்மட் அவர்களுக்கும், வளவாளராக கலந்து கொண்ட வைத்தியர் எம்.என்.எம். தில்சான் அவர்களுக்கும் USF SriLanka அமைப்பினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.