Tuesday, May 21, 2024
Home » 47 ஆண்டுகளின் பின் சிக்கிய கொலையாளி

47 ஆண்டுகளின் பின் சிக்கிய கொலையாளி

by gayan
July 27, 2023 10:31 am 0 comment

சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர் கடத்தி கொல்லப்பட்ட எட்டு வயது சிறுமியின் இறுதிக் கிரியையை வழிநடத்திய ஓய்வுபெற்ற அமெரிக்க திருச்சபை போதகர் ஒருவர் அந்த சிறுமியின் கொலை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

பிலடொல்பியா புறநகர் பகுதியில் கடந்த 1975 ஓகஸ்ட் 15 ஆம் திகதி கோடைகால பைபிள் முகாம் ஒன்றில் பங்கேற்ற சிறுமியே காணாமல்போனார். சிறுமியில் உடல் இரண்டு மாதங்களின் பின் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் அநாமதேய பெண் ஒருவர் அளித்த வாக்குமூலத்தில், தனது தந்தையின் உற்ற நண்பரே குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் 83 வயதான டேவிட் சன்ஸ்ட்ரா மீது சிறுமியை கடத்தியது மற்றும் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோர்ஜியாவில் வைத்து கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT