Monday, May 20, 2024
Home » மகனின் இறுதிக் கிரியையில் துப்பாக்கிச் சூடு: 13 பேர் பலி

மகனின் இறுதிக் கிரியையில் துப்பாக்கிச் சூடு: 13 பேர் பலி

by sachintha
July 25, 2023 3:19 pm 0 comment

கொங்கோவில் தான் வரும் முன்னர் தனது மகனை அடக்கம் செய்ததால் கோபமடைந்த இராணுவ வீரர் ஒருவர் இறுதிக் கிரியையில் உறவினர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

நியாகோவா என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்ற சம்பவத்தில் அந்த இராணுவ வீரரின் மனைவி, மாமியார், அவரது இரு குழந்தைகளும் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவ பேச்சாளர் ஜுலஸ் நிகொங்கே தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இராணுவ வீரர் மற்றொரு கிராமத்தில் தனது சோதனைச்சாவடியில் இருந்து வீடு திரும்பியபோது தனது மகன் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்டதை கண்டு கோபமடைந்தே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT