மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று (20) இடம்பெறவுள்ளது.
இன்றைய நாடாளுமன்றம் மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, பி.பி. 5.00 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளதுடன், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போது விவாதம் நடைபெறும்.
அத்தோடு. நாளை (21) காலை 10.30 மணி முதல் . 5.00 மணி வரை வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.