1.1K
– அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்
இம்முறை இடம்பெறும் க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் விண்ணப்பத்தின்போது, 2023 ஆம் ஆண்டுக்கு மாத்திரம் உரித்தான வகையில், பாடசாலை வருகை வீதம் 40% ஆக இருப்பது போதுமானது என அறிவிக்ப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
பாடசாலை வருகை வீதம் தொடர்பான பிரச்சினைகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை விண்ணப்பதாரர்கள் க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் வாய்ப்பை வழங்காதிருக்க வேண்டாம் என, அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.