683
தென்னாபிரிக்க துறைமுக நகரான டர்பனின் வறிய பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீயில் நூற்றுக்கணக்கான வீடுகள் கருகியுள்ளன.
சட்டவிரோத குடியிருப்புப் பகுதியில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட இந்த தீயினால் ஒருவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தீக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் போதையில் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே தீ பரவியதாக கூறப்படுகிறது.
இந்தத் தீயினால் சுமார் 1000 குடிசைகள் அழிந்திருப்பதோடு சுமார் 3000 பேர் வீடுகளை இழந்திருப்பதாக தென்னாபிரிக்க செஞ்சிலுவை சங்க பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.