ஆர்ஜன்டீன கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி 2025ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியுடன் ஒப்பந்தமாகியுள்ளார்.
7 முறை பலொன் டியோர் விருதைப் பெற்ற அவர் இன்னும் சில நாட்களில் அந்த அணியுடன் சேர்ந்து விளையாடவுள்ளார். “அமெரிக்காவின் கால்பந்து விளையாட்டுக்குப் பங்களிக்க நான் ஆவலுடன் உள்ளேன்” என்றார் மெஸ்ஸி.
மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக அவரது முதல் ஆட்டத்தை வரும் ஜூலை 22ஆம் திகதி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“உலகின் சிறந்த கால்பந்து விளையாட்டாளர்களை அமெரிக்காவுக்குக் கொண்டுவருவது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. மெஸ்ஸியைப் போன்ற உன்னத விளையாட்டாளர் இன்டர் மியாமி அணியில் சேர்ந்துள்ளதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது,” என அந்த அணியின் இணை உரிமையாளர் டேவிட் பெக்கம் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்டர் மியாமி அணியின் வீரராக மெஸ்ஸி நேற்று (16) அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.